Sep 14, 2008

உன்னைப்போல்

உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
தமிழ் இலக்கியத்தில் வாசகம் தேடி நான்
யாசகம் நடத்தி
கிடைத்தவை கொண்டு
எழுதி முடிக்க

எதிரில் நீ
உன்னோடு ஒரு ஒப்பீடு

வரிகளும் மறைந்து
வாசகமும் மறைந்து
என் ஏடு முழுவதும்

அதன்பின்
மீதமிருப்பது
வெள்ளை தாள்
வெற்று புத்தகம்

நீ

நீ
மட்டும் தான்
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
முடியும்.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது