Jan 17, 2009

கண்தானம்

கண்தானம்

கண் தானத்திற்கு எழுதி வைத்தால் வீணாகப்போகாமல் கண் தேவைப்படும் யாருக்கேனும் உபயோகப்படலாம். இறப்பிற்கு பின் 6 மணி நேரத்திற்குள் கண் தானம் செய்யப்பட வேண்டும்.


கண் தானம் நல்ல முறையில் நடக்க கீழ்க்கண்ட செயல்கள் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


* இறந்தவரின் கண்ணின் மேல் ஈரப்பஞ்சை வைத்திருத்தல்


* இறந்தவரின் நேர் மேலே மின் விசிறி இருக்குமானால் அதை இயங்காமல் வைத்திருந்த்தல்


* இறந்தவரின் கண்ணில் தொற்று வராமல் தடுக்க antibiotic கண் சொட்டுக்களை விடுதல்


* முடிந்தால் இறந்தவரின் தலையை 6 இன்சுகளுக்கு உயர்த்தி வைத்தல்..


மேலும் விபரங்களுக்கு சென்னையில், சங்கர நேத்ராலயாவில் இயங்கி வரும் C U Shah கண் வங்கியை 28271616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும். சுட்டி

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது